/* */

குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு

தெப்பக்குளத்தில் மீனுக்கு இறை போடும் போது குளத்தில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விராலூரைச் சேர்ந்தவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா. இவர் மற்றும் இவரது தோழி யசோதா ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை விராலிமலை-மதுரை சாலையில் உள்ள நீர் நிரம்பிய தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்து குளத்து மீன்களுக்கு இறையாக பொரி கடலையை குளத்து நீரின் நடுவே தூக்கி எறிந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய லாவண்யா கால் தவறி குளத்து நீரில் விழுந்து தத்தளித்துள்ளார்.

இதனையடுத்து அவரை காப்பாற்ற நீரில் குதித்த யசோதாவும் நீரில் மாட்டி தத்தளிக்க அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா இன்று உயிரிழந்தார். 18 வயதான மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுகாயங்களுடன் யசோதா நலமுடன் உள்ளார். இறந்த லாவண்யா கடந்த 12-ஆம் வகுப்பு தேர்வில் 510 மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...