/* */

டிப்பர் லாரி மோதி 13 ஆடுகள் பலி: டிரைவர் போலீசில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம்அரிமளம் அருகே ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.

HIGHLIGHTS

டிப்பர் லாரி மோதி 13 ஆடுகள் பலி: டிரைவர் போலீசில் சரண்
X

விபத்தில்  பலியான ஆடுகள் 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதி ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மதி(40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் கூடாரம் அமைத்து செம்மறி ஆடுகள் மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு அரிமளத்தில் இருந்து திருமயம் செல்லும் சாலை ஓரம் ஆடுகளை கூடாரத்தில் அடைத்து வைத்துள்ளார்.

அப்போது இதிலிருந்த 15 ஆடுகள் சாலை ஓரம் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோரம் படுத்திருந்த ஆடுகள் மீது ஏறியதில் 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தது இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் ஆளப்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த உடையப்பன் அரிமளம் போலீசில் சரணடைந்தார். மேலும் இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் மதி அரிமளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 July 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்