கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த இரண்டு போலீஸார் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர் சந்திரசேகர், திருப்புனவாசல் தலைமைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்துள்ளனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பிலிருந்த நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக திருச்சி சரக டிஐஜி சரவணா சுந்தர் தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் செல்போன்களை வைத்துக் கொண்டு அவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்பது குறித்து திருச்சி சரக டிஐஜி சரவணா சுந்தர் விசாரணை நடத்தினர். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சா வியாபாரிகளுடன் புதுக்கோட்டை நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துக்குமார் ஆகியோர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த, புதுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமைக் காவலர் முத்துக்குமார் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் உடன் தொடர்பில் இருந்த நகர காவல் நிலைய உதவியாளர் சந்திரசேகர் மற்றும் திருப்புனவாசல் காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார் ஆகிய இருவரையும் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.