/* */

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
X

புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் 4 மணி முதல் 5 மணி நேரம் வரை தொடர் மழை பெய்து வருவதால், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது குறிப்பாக புதுக்கோட்டை அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். உடனடியாக மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகாமால் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று புதுக்கோட்டை பூ சந்தையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

Updated On: 26 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு