Begin typing your search above and press return to search.
கோயில்களில் பங்குனி உத்தரவிழா சிறப்புவழிபாடு அன்னதானம்: பக்தர்கள் பங்கேற்பு
பங்குனிஉத்தர விழாவையொட்டி பல்வேறு முருகன்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது
HIGHLIGHTS
புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத்தைமுன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டைமேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத்தைமுன்னிட்டு இதையொட்டி, காலையில் அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தண்டாயுதபாணி சுவாமி மலர் அலங்காரத்திலும்,ஆலயத்திலுள்ள விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் உற்சவர் மலர் அலங்காரத்திலும்அருள் பாலித்தார். இதில், அந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பாலு அய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.