/* */

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே 13 வயது சிறுமியை பாலியல் நோக்கத்தோடு அசிங்கமாக பேசிய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை
X

புதுக்கோட்டை அருகே13வயது சிறுமியை பாலியல் நோக்கத்தோடு பின் தொடர்ந்து அசிங்கமாக பேசிய குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ்நகர் காவல் சரகம், மேட்டுப்பட்டி கிராமம், உடையநேரி காலணியைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா என்ற சிவகண்ணன்(32) என்பவர் கடந்த 2021-ல் 13 வயது சிறுமி பள்ளிக்குச் செல்லும் போது காதலிப்பதாக சொல்லிய போது, மறுத்த சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவா மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போகஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் (24.08.2022-) விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் 3 மாதங்கள் சிறை தண்டனையும்,ரூ.3,000-அபராதமும்,மேற்படிஅபராதத் தொகையைக் கட்டதவறினால் மேலும் ஒருவாரம் சிறைதண்டனையும், போக்ஸோ சட்டத்தின்படி 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும்,ரூ.20,000-அபராதமும், மேற்படிஅபராதத் தொகையைக் கட்டத்ந தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்குரூ.30,000- தொகை இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்து நீதிபதி முனைவர் சத்யா தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை அரசுதரப்பு வழக்கறிஞர் யோகமலர் நடத்தினார்.. மேலும் இவ்வழக்கினை சிறப்பாகபுலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் நீதிமன்றபணிக்கான முதல் நிலைக் காவலர் கார்த்திகா ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பாராட்டு தெரிவித்தார். .தீர்ப்புக்குப் பின் குற்றவாளி திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 25 Aug 2022 4:30 AM GMT

Related News