மேகதாதுவில் அணைகட்ட எதிப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வரும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமை வைத்தார். மாநில குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி எடுத்து வருகிறது. மேலும் கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அணை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் நிலையில் நேற்று தமிழக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரை சந்தித்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்று கர்நாடக முதல்வர் பிரதமரை சந்தித்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும் அதற்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.