கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொறியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் கட்டுமான கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் புதுக்கோட்டை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி மாநில அளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கம், அகில இந்திய கட்டுனர் சங்கம், பொன்னமராவதி கட்டிட பொறியாளர் சங்கம், புதுக்கோட்டை கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமானம் ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கட்டுமானப் பொறியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். என்பது குறித்து விளக்கமாக பொது மக்களிடம் எடுத்துக்கூறி பேசினர்.
மேலும் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போனால் கட்டிடம் கட்டும் பொறியாளர்கள் மாற்று வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறினார்.