Begin typing your search above and press return to search.
மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நிறுத்தம்
புதுக்கோட்டையில் மின் வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மின் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நடைபெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் இரண்டு அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மின் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் கிருமி நாசினி மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்களுக்கு திங்கட்கிழமை மின் கட்டணம் கட்ட வருமாறு அலுவலர்கள் தெரிவித்ததால் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்