/* */

மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது

E-Waste Management Rules -பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்க முழு ஒத்துழைப்புத்தர வேண்டும்

HIGHLIGHTS

மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது
X

பைல் படம்

E-Waste Management Rules -புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் சார்பில் அக்டோபர் 1, 2016 முதல் மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்விதியின்கீழ், அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர் களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.

மேலும் நடுவண் மாசுகட்டுபாடு வாரியத்திடம் நீட்டிக்கபட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின்-கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.

மின்னனுகழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 24-ன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவு பொருட்களைச் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின்-கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்-கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள் 2016, விதி 21-ன்படி இவ்விதிகள் மீறப்பட்டால் மின் பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுபோர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986-ன் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்படும்.

எனவே இவ்வகையான செயல்களில் ஈடுபடும் மின்கழிவு கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5-ன் படி அந்நிறுவனத்தை மூடிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின்-கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்தகத்தைத் தவிர்க்குமாறும், மேலும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அல்லது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் சட்டவிரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின்-கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?