திமுக வேட்பாளர் வளர்மதி சாத்தையா வாக்கு சேகரித்தபோது பறக்கும் படை ஆய்வு
நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி சேகரித்தபோது பறக்கும் படையினர் ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு
HIGHLIGHTS
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி வாக்கு கேட்கும் போது பறக்கும் படையினர் ஆய்வுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் வளர்மதி சாத்தையா இன்று தனது ஆதரவாளர்களோடு பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்து வந்தார். அப்போது திடீரென்று தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தினர் .மேலும் வேட்பாளர் மற்றும் அவரது கணவர் சாத்தையாவிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
இதில் தாங்கள் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு உட்பட்டு தான் பிரசாரம் செய்து வருவதாக அவர்கள் கூறினர்.இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.மேலும் அவரிடமும் திமுகவிற்கு வாக்களிக்குமாறு வேட்பாளர் வளர்மதி வாக்குகள் சேகரித்தார்.திமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் பறக்கும் படையினர் திடீரென்று வந்து ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.