கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்து ஃபேஷன் பிரேடு நடத்திய ஆட்சியர்
புதுக்கோட்டையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஃபேஷன் பரேடு நடத்திய ஆட்சியர்.
HIGHLIGHTS
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்து ஃபேஷன் பரேடு நடத்திய ஆட்சியர்.
இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ 2.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடையின் தீபாவளி விற்பனையை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2.25 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர் கவிதா ராமு கடையை பார்வையிட்டார். அப்போது புடவை ரகங்களை பார்வையிட்ட ஆட்சியர் புடவைகளை தேர்வு செய்து அந்த புடவைகளை ஃபேஷன் பேரேட்டில் நடத்துவது போன்று தன்மேல் அணிந்து கண்ணாடியில் பார்த்து புடவையின் அழகை ரசித்து மகிழ்ந்தார். ஆட்சியரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின்னர் அதில் இரண்டு புடவைகளை தேர்வு செய்து பணம் கொடுத்து வாங்கிச் சென்றார்.