புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
ரோட்டராக்ட் சங்கம், மவுண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் , சிகப்பு நாடாகழகம் ஆகியோர் இணைந்து நடத்தினர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மவுண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் மற்றும் சிகப்பு நாடா கழகம் ஆகியோர் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
இம்முகாமிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், ஓவியர் ரவி, பொருளாளர் கதிரேசன், கல்லூரிகளின் ரோட்டராக்ட் சங்க தலைவர்கள் சையது முகமது, எபினேசர் க்ளப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் ,புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஃப்ளாரன்ஸ் ஜெயபாரதன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியவர்களை பாராட்டி பேசினார்.ரோட்டரி மாவட்டம் 3000த்தின் துணை ஆளுநர் சிவாஜி, மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்தவங்கி மருத்துவ அலுவலர் டாக்டர். கிஷோர் குமார் அவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்ற இம்முகாமில் ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்களிடமிருந்து மொத்தம் 54 யூனிட் இரத்தம் கொடையாக பெறப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை ரோட்டராக்ட் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுவாமிநாதன், பேராசிரியர் ஜோவன்னா உள்ளிட்ட ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் சங்கங்களின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.நிறைவில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.