Begin typing your search above and press return to search.
மிசா ஆறுமுகத்தின் 13 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
மறைந்த திமுகவின் மிசா ஆறுமுகத்தின் 13 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த கலைஞரின் நெருங்கிய நண்பரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கட்சியை வளர்க்க அதிக ஈடுபாடு கொண்டவருமான மறைந்த மிசா ஆறுமுகத்தின் 13வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகாமி ரத்ததான கழகம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமில் மறைந்த மிசா ஆறுமுகத்தின் மகனும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் செந்தில் மற்றும் சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் தலைவர் மூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.