Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு
பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் வீட்டு ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள், மற்றும் அதே ஊரைச் சேர்ந்த, விவசாயி சுப்பிரமணியன் என்பவர் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் அக்டோபர் 26ம் தேதி நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அக்டோபர் 27-ம் தேதி இன்று காலை பட்டியில் இருந்த ஆடுகள் திருட்டுபோனது தெரிய வந்தது, இதுகுறித்து விவசாயிகள் இருவரும் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் . கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.