பெரம்பலூர் சிகரம் சிலம்பம் பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
பெரம்பலூரில் சிலம்பம் பயிற்சி நிறைவடைந்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
அன்னமங்கலம் சிறுமலர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சிலம்பம் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மஞ்சள்,பச்சை பட்டையங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த சிலம்பம் தேர்வினை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கலிய மூர்த்தி, சிலம்பாட்ட கழக அரியலூர் மாவட்ட துணை செயலாளர் செல்வா ஆகியோர் இணைந்து முறையாக தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தனர்.
அன்னமங்கலம் சிறுமலர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிலம்பாட்ட கழக போட்டி இயக்குநர் மகாகுரு.விக்டர் குழந்தைராஜ், அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயத்தின் பங்குதந்தை ஆரோக்கியசாமி அடிகளார் மற்றும் வியாபாரிகள் சங்கம் கௌரவ தலைவர் திரு.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தனர்.
பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அன்னமங்கலம், பாளையம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் பங்கேற்ற ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த சிலம்பம் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மார்டின் அந்தோணி என்பவர் செய்திருந்தார்.