/* */

இன்று மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்ட ஆய்வு கூட்டம்

பெரம்பலூரில் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் நடத்தும் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு குறித்த ஆய்வுக்கூட்டம்.

HIGHLIGHTS

இன்று  மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்ட ஆய்வு கூட்டம்
X

தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணி செய்யும் தொழிலாளர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் (Prohibitionof Employment as Manual Scavengers and their Rehabilitation Act 2013) முறையாக அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் இந்திய அரசின் தூய்மை பணியாளர்களுக்கான (SAFAI Karamacharis) தேசிய ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் 27.08.2021 அன்று மாலை 03.00 மணியவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசுத்துறை சார்ந்த அலுவலரகள் கலந்து கொள்ள உள்ளார்கள். மேலும், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை தொழில் செய்வோர்களிடம் தல விசாரணை, கலந்துரையாடல், குறைகேட்பு நடத்தப்படவுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை தொழில் செய்வோர் தங்களது குறைகளை இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Aug 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!