Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் அருகே மாம்பழம் விளைச்சல் அதிகம், விவசாயிகள் மகிழ்ச்சி
பெரம்பலூர் அருகே விசுவகுடியில் மாம்பழம் சாகுடியில் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் உள்ள விசுவகுடி நீர்த்தேக்கம் அருகில் மாம்பழம் சாகுபடி அதிகம். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.
பத்து ஏக்கரில் மாம்பழம் பயிர் செய்துள்ள விவசாயி ஜெயராமன் கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வெயில் காரணமாக மாம்பழம் வரத்து குறைந்தது.
இந்தநிலையில் இந்தாண்டு பெய்த பருவ மழையால் மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இந்தாண்டு செலவு போக 5 லட்சம் வரை வருமானம் ஈட்டித்தந்துள்ளதாக விவசாயி தெரிவித்தார்.