Begin typing your search above and press return to search.
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் : பெரம்பலூர் விவசாயிகள் கவலை
பெரம்பலூர் அருகே தொடர் மழை காரணமாக வயல்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை, அரும்பாவூர், அன்னமங்கலம், அரசலூர் அகிய பகுதிகளில் இந்தாண்டு க்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல்பயிர் செய்திருந்தனர்.
இம்மாத துவக்கத்தில் இருந்த மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அரும்பாவூர், தொண்டமாந்துறை உள்ளிட்ட பகுதிகளை மழை அதிகமாக பெய்துவந்ததால் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நெல்மணிகளோடு மழைநீரில் சாய்ந்து சேதமானது.
இந்த மழையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெல்பயிர்கள் சேதமடைந்துள்ளது.