பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ஆம் கட்டமாக 240 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடைபெற்று வருவதையொட்டி இன்று(10.10.2021) மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குரும்பலூர் புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களையும்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி அம்மாபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், பெரம்பலூர் வட்டாட்சியர் சின்னதுரை, குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.