Begin typing your search above and press return to search.
பெரம்பலூர்: உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 09.10.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வாலிகண்டபுரம் (6486) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடை ஏழாம் தேதி காலை 10.00 மணி முதல் ஒன்பதாம் நடுஇரவு 12.00 மணி முடியவும் மற்றும் வேப்பந்தட்டை(6437), அன்னமங்கலம்(6450) மற்றும் பரவாய்(கிழக்கு)(6428) ஆகிய மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு 12.10.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பிறப்பித்து உள்ளார்.