பெரம்பலூர் அருகே குட்டையில் குளித்த இரு சிறுமிகள் சடலமாக மீட்பு
பெரம்பலூரில் குட்டையில் குளித்த சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவரது மனைவி சுகன்யா (வயது 27). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மகாலெட்சுமி (வயது 6) ஜெயஸ்ரீ (வயது 4) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.
நேற்று மாலை மகாலெட்சுமி ,ஜெயஸ்ரீ இருவரும் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக சிறுமிகள் இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை முதல் குழந்தையை காணாமல் பெற்றோர் தேடிவந்த நிலையில் இன்று காலையில் மகாலெட்சுமி ,ஜெயஸ்ரீ இருவரும் நீரில் இறந்த நிலையில் நீரில் மிதந்துள்ளனர்.
இதை கண்ட பொது மக்கள் தகவல் தெரிவிக்க பாடாலூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு சிறுமிகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.