/* */

பெரம்பலூரில் குழந்தை திருமண தடுப்பு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் குழந்தை திருமண தடுப்பு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடக்கம்
X

பெரம்பலூரில் நடந்த குழந்தை திருமண தடுப்பு பிரச்சாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்றார்.

பெரம்பலூரில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் கடந்த 14ம்தேதி முதல் 19ம்தேதி வரை குழந்தைகள் உங்கள் நண்பன் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ராக்கி கட்டுதல், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நான்காவது நாள் நிகழ்ச்சியாக குழந்தை திருமண தடுப்பு கையெழுத்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ச.மணி தலைமை வகித்து கையெழுத்திட்டு கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கலந்து கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.

இதை தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் கொடுத்து குழந்தை திருமண தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் மாணவிகள், பெண்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், இளைஞர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.

Updated On: 17 Nov 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது