/* */

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிய பெண் கைது

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், அம்மன் கழுத்தில் இருந்த தங்கத் தாலியை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிய பெண் கைது
X

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், தங்கத் தாலியை திருடிய பெண் கைது ( மாதிரி படம்)

Nilgiri News, Nilgiri News Today- ஊட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் ஒரு பஜனை சபை செயல்பட்டு வருகிறது. இங்கு கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ்(வயது 75) என்பவர் பணியாற்றி வருகிறார். விழா காலங்கள் மற்றும் முக்கியமான நேரங்களில் இங்குள்ள பஜனை சபை கூடத்தில் வழிபாடு நடக்கும்.

இந்நிலையில் பஜனை சபை கூடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஊட்டி அனந்தகிரி பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பவரது மனைவி ஸ்வீட்டி பெட்ரீசியா(25) என்பவர் பஜனை கூடத்தின் சாவியை கடந்த 9-ம் தேதி கோகுல்ராஜிடம் வாங்கியுள்ளார்.இதன் பின்னர் பூஜை முடிந்து சாவியை ஒப்படைத்து விட்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் கோகுல்ராஜ் பஜனை சபை கூடத்திற்கு சென்றபோது அம்மன் கழுத்தில் அணியப்பட்ட 4 கிராம் தங்கத்தாலியை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 9-ம் தேதி அம்மன் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று வந்த ஸ்வீட்டி பெட்ரீசியா, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலியை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் தங்கத்தாலியை மீட்டடனர். அவரை, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 12 Aug 2023 3:05 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்