/* */

உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு

உதகை நகராட்சி 36 வார்டுகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க. சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பாஜகவின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு வாரத்திற்கு சேவை வாரமாக கடைபிடிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், கொரோனோவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த அனைவருக்கும் உணவு, காய்கறிகள், மளிகை தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

உதகை நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 200 க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் கூறும்போது பேரிடர் காலங்களில் தங்களின் உயிரை பணையம் வைத்து பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்த நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகி போஜராஜன், மாவட்ட பொருளாளர் தருமன், உதகை நகர தலைவர் ப்ரவீன், நகர செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 31 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!