/* */

உதகையில் பாடல் பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சேகர், சினிமா பாடலை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

உதகையில் பாடல் பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை  வேட்பாளர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரதான கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதில் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும், பல சுயேட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர். இதில் உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சேகர் என்பவர் சினிமா பாடலை பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் கூறுகையில், உதகை நகராட்சியில் 8வது வார்டில் போட்டியிடும் தனக்கு டிரம்பெட் என்னும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் ஒரு மேடைப் பாடகர் எனவும் பாடல்களை பாடி வாக்கு சேகரிக்கும் பொழுது பகுதியில் உள்ள மக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் பாடி மகிழ்வித்து வாக்கு சேகரிப்பது தனக்கும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

தனது பகுதியில் உள்ள மக்கள் தனக்கு வாய்ப்பு அளித்து வெற்றிபெறச் செய்தால் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பேன் எனவும் இந்த மேடைப் பாடகர் சுயச்சை வேட்பாளர் தெரிவித்தார்.

Updated On: 9 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!