/* */

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக் குழுக்களுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
X

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என, இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

உதகையில், இது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டத்தில், 42 பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

மழை தாக்கம் அதிகமாக உள்ள கூடலூர், உதகை, குந்தா பகுதிகளில் மழையினால் ஏற்படும் மண் சரிவு மற்றும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை, மற்றும் தீயணைப்பு துறையினர், ஜேசிபி, மரம் அறுக்கும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக, அவர் கூறினார்.

நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான பகுதிகளாக 283 இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மிகவும் அபாயகரமான 43 இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீட்டு சுவர்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும், ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 13 July 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...