/* */

கேரட் விலை வீழ்ச்சியால், ஊட்டியில் விவசாயிகள் கவலை

Nilgiri News, Nilgiri News Today- எதிர்பார்த்த விலை கிடைக்காமல், ஊட்டி கேரட் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

HIGHLIGHTS

கேரட் விலை வீழ்ச்சியால், ஊட்டியில் விவசாயிகள் கவலை
X

மேட்டுப்பாளையத்தில்  கேரட் விலை குறைந்துள்ளது. (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஊட்டியை பொருத்தவரை ஊட்டியில் அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்றவைகளுக்கு தனி மகத்துவம் உள்ளது. மற்ற ஊர்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை காட்டிலும், நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் காய்கறி வகைகளுக்கு தனியாக சுவை உண்டு. அதனால், ஊட்டி காய்கறி என்றே, வியாபாரிகள் கூவி கூவி விற்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஊட்டியில் பயிர் செய்யப்படும் உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, முட்டைக்கோஸ் பீட்ரூட் போன்ற காய்கறிகளுக்கு தனி வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் ஊட்டி கேரட் என்றால், பச்சையாக சாப்பிடுவதற்கே ருசியாக இருக்கும்.

கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 3 Aug 2023 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’