/* */

இயற்கையாக பூக்கும் மலருக்கு செயற்கை வர்ணம் பூசி விற்பனை

இயற்கையாக பூக்கும் மலருக்கு செயற்கை வர்ணம் பூசி விற்பனை
X

ஊட்டியில், செயற்கை வர்ணங்கள் பூசி விற்கப்படும், மஞ்சள் நிற வாடாமல்லிக்கு, சுற்றுலா பயணிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், வனங்களை ஒட்டிய பகுதி, பயிர் விளைச்சல் இல்லாத நிலங்களில், 'வாடா மல்லி' எனப்படும், மலர் செடிகள் அதிகளவில் மலர்கின்றன. 'ஹெலிகிரைசம்' என்ற தாவரவியல் பெயரை கொண்ட இச்செடிகளில் உள்ள மலர்கள், ஓராண்டு வரை வாடாமல் இருக்கும் என்பதால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உட்பட இடங்களில் அவை, கொத்து, கொத்தாக கட்டி விற்கப்படுகின்றன. இந்நிலையில், மஞ்சள், 'பிங்க்' நிறத்தில் மட்டுமே விளையக் கூடிய, வாடா மல்லிக்கு செயற்கை வர்ணம் பூசி விற்கப்படுகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதி வியாபாரிகள் சிலர் இது குறித்து கூறுகையில், 'ஊட்டியில் விளையும் மஞ்சள் நிற வாடா மல்லியை, கோவையில் இருந்து வரும் சிலர் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்; பின், செயற்கை வர்ணம் பூசி, பச்சை, ஊதா, சிவப்பு, நீலம் என, பல வண்ணங்களில் அழகுபடுத்துகின்றனர். தவிர, பச்சை நிற இலை, தண்டுகளுக்கு கூட செயற்கை வர்ணம் பூசுகின்றனர். சுற்றுலா பயணிகள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

Updated On: 9 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை