Begin typing your search above and press return to search.
உதகை கல்லட்டி சாலையில் கார் விபத்து: நாமக்கல் மாணவர்கள் படுகாயம்
கல்லட்டி மலை பாதையில் உள்ள 22 கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் செல்லபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முதுமலைக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லட்டி மலைப் பாதையில் உள்ள 22 கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், புகழேந்தி, ராஜ்குமார், தென்னரசு, பிரவீன், கௌதம் ஆகிய 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள், உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.