/* */

உதகையில் கலெக்டர் தலைமையில் மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம்

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

உதகையில் கலெக்டர் தலைமையில் மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம்
X

 உதகை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்ட கலெக்டர் அம்ரித்.

நீலகிரி மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 தாலுகா மற்றும் துணை தாலுகா மருத்துவமனைகள், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்துவமான மருத்துவமனை முகாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொற்றுநோயை தடுக்கவும், நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெறும்போது மனநிம்மதியுடன் இருத்தல் என 30.04.2022 வரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை முகாம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலெக்டர் பேசும்போது, நமது மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும். கழிப்பறை, குளியலறைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தேவையற்ற கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

நாம் வேலை பார்க்கும் இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும். நமது மருத்துவமனையை மகத்தான மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். மருத்துவமனை வளாகத்தில் கலெக்டர் சோலை மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் பணியில் ஈடுபட்டனர். முகாமில் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!