/* */

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துள்ள ஜகரண்டா மலர்

உதகையில், ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஜகரண்டா மலர் தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக கவர்ந்து வருகிறது

HIGHLIGHTS

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பூத்துள்ள ஜகரண்டா மலர்
X

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் நெடுஞ்சாலையில் கண்களுக்கு விருந்து அளித்தது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் மலர்ந்துள்ள ஜகரண்டா மலர்கள்.

உலக சுற்றுலாவில் நீங்கா இடம் பிடித்த மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா ஸ்தலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள், சரணாலயங்கள் போலவே மலைப்பாதைக்கும் ஓர் அழகு உண்டு. தற்போது கோடை காலம் நெருங்கிய நிலையில் குன்னூர், கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இந்நிலையில், பனிக்காலம் முடிந்து தற்போது கோடைக்காலம் நெருங்கிய நிலையில் இதமான காலநிலை நிலவி வருவதால் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கும். ஜகரண்டா மலர்கள் பூக்கும் மரங்கள் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகு படுத்தும் வேலியாகவும் 1800 களில் ஆங்கிலேயர் காலத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த மரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூத்து, மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து மலர்கள் மட்டும் ஊதா நிறத்தில் காட்சி அளித்து பூத்துக்குலுங்கும்.தற்போது கோத்தகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரத்தில் ஜகரண்டா மலர்கள் பூத்து உள்ளன. இதை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் படம் பிடித்து, செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஜகரண்டா மலர் தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக கவர்ந்து வருகிறது.

Updated On: 27 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...