/* */

குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா

குன்னூர், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டியுடன் யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
X

குன்னூர் - மேட்டுப்பாளையம் ரோடு, மரப்பாலம் அருகே பிரதான சாலையை வழிமறித்து நின்ற  காட்டுயானைகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக குட்டியுடன் 2 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

காட்டேரி அருகே காட்டுயானைகள் அரசு தோட்டக்கலைப்பண்ணையை சேதப்படுத்திய நிலையில், இன்று பிரதான சாலையான மலைப்பாதையில், மரப்பாலம் அருகே பிரதான சாலையை வழிமறித்து காட்டுயானைகள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை சுமார் ஒரு மணி நேரம் போராடி, சாலையை விட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 23 July 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!