Begin typing your search above and press return to search.
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91-ஆம் ஆண்டு நிறைவு விழா
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்று 91ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் தியாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளி, மலர்தூவி மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக தியாகிகள் சர்தார் வேதரததினம், வைரப்பன் ஆகியோர் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அகஸ்தியம்பள்ளியில் உள்ள சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் மாநில காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ராசேந்திரன், தியாகிகள் காங்கிரஸ் கட்சியினர் ஸ்தூபிக்கு முன்பு உப்பு அள்ளி, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.