Begin typing your search above and press return to search.
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
HIGHLIGHTS
உப்பு சத்யாகிரக தண்டி யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் இருந்து புறப்பட்டது. நேற்று (30-04-22) வேதாரணியத்தில் இதன் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம். கே. விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், வ. உ. சி. சங்கர், திம்மை செந்தில்குமார், முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.