Begin typing your search above and press return to search.
வேதாரண்யத்தில் சி-விஜில் பாதுகாப்பு ஒத்திகை
வேதாரண்யம் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியான ஆப்பரேஷன், சி விஜில் நடைபெற்றது .
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதை தடுக்க இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த ஒத்திகை ஆப்பரேஷன், 'சி' விஜில் என்ற பெயரில், நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதிகளில் நடைபெற்றது.
இன்று தொடங்கி நாளை மாலை வரை இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது கடற்கரை பகுதிகளில் திரிந்த புதிய நபர்களை பிடித்து, போலீசார் விசாரித்தனர். கடலோர காவல்படையின் ரோந்து படகு மூலம் கடலில் கண்காணித்தனர்.பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, தத்ரூபமாக இருந்ததால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.