Begin typing your search above and press return to search.
நாகப்பட்டினம் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்
நாகப்பட்டினம் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை கலெக்டர் பிரவின் நாயர் தொடங்கிவைத்தார்
HIGHLIGHTS
கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு தளர்வற்ற முழு ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு அமுல் படுத்திய நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளையும், பழங்களையும் குறைந்த விலையில் நடமாடும் கடைகளாக வாகனங்கள் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்ய நகராட்சி ,உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வேளாண்துறை,தோட்டகலைத்துறைகளுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நாகை நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் மூலம் இன்று காய்கறிகள் பழங்கள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் நகராட்சி அலுவலகத்திலிருந்து வாகனத்தை துவக்கிவைத்தார்.
முன்னதாக 18ல் இருந்து 44 வயது உடைய நகராட்சி ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.