நாகை- திருச்சி ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவக்கம்
நாகை-திருச்சி பயணிகள் சிறப்பு விரைவு ரயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று தொடங்கியது.
HIGHLIGHTS
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தினசரி இயங்கி வந்த பயணிகள் ரயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதைத் தொடர்ந்து இன்று முதல் திருச்சியிலிருந்து நாகைக்கு பயணிகள் ரயில் மீண்டும் தொடங்க தென்னக ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாகையில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலை சிறப்பு விரைவு ரயில் ஆக மாற்றி அமைக்கப்பட்டு அதன் சேவை இன்று முதல் துவங்கப்பட்டது.
687 நாட்களுக்கு பின் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி சென்ற ரயிலுக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, நாகையில் இருந்து திருச்சிக்கு விரைவு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்கள் தங்களது மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்து கொண்டனர்.