கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ஏ.கே.எஸ்.விஜயன் குத்து விளக்கேற்றி துவக்கம்
இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க, தமிழகஅரசு, மத்தியஅரசிடம் வலியுறுத்தும். தமிழக டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உறுதி.
HIGHLIGHTS
இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க, தமிழகஅரசு, மத்தியஅரசிடம் வலியுறுத்தும். தமிழக டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உறுதி.
நாகப்பட்டினத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டு புடவைகள் மற்றும், ஆடைகளை பார்வையிட்ட ஏ.கே.எஸ்.விஜயன், தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு தள்ளுபடி விலையில் தயாரிக்கப்பட்ட பட்டுபுடவையை முதல் வாடிக்கையாளருக்கு வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் கூறிய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை சிறையில் உள்ள நாகை மீனவர்களை மீட்க தமிழக முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்திள்ளார் என்றும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கைது செய்யும் சம்பவத்தை தடுத்து நிறுத்திட நிரந்தர தீர்வு எட்டப்பட்டு தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் எனவும் கூறினார்.