/* */

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணியில் அ.ம.மு.க. சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா
X

வேளாங்கண்ணியில் நடந்த கிறிஸ்துமஸ்  விழாவில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா கழக அமைப்பு செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் தலைமையில் நடைபெற்றது. பூர்ணகும்ப வரவேற்புடன் தொடங்கிய விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து பாதிரியார்கள் வழங்கிய குழந்தை இயேசுவை டி.டி.வி. தினகரனிடம் குடிலில் வைத்தார். இதில் பங்கு தந்தைகள், அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டி.டி.வி. தினகரன் மதம், இனம், ஜாதியின் பெயரால், அமைதி பூங்காவாக உள்ள நமது மாநிலத்தை நமது நாட்டை அரசியல் காரணங்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் கட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய டி.டி.வி. தினகரன்

கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவருக்கு தெரியும் என்பதால்,விவேக்கிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருக்கலாம் என்றார். மேலும் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் தாண்டி குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் தாங்கள் கூறியதை மறந்துவிட்டு ஒன்றிய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர். இதை தான் எதிர்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள் தான் இதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார். மேலும் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க - அ.தி.மு.க. இணைப்பு உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று டி.டி.வி. தினகரன் தலையாட்டி பதிலளித்தார்.

Updated On: 23 Dec 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்