/* */

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார்.

HIGHLIGHTS

நாகூர் ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு
X
நாகூர் தர்காவில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வழிபாடு நடத்தினார்.

நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கிய அவர், நாகூர் தர்கா அலங்கார வாசல் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகர்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்மகன் உசேன் கூறுகையில் இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு நன்மை பயக்கும். பா.ஜ.க. எங்களோடு கூட்டணியில் இல்லாத காரணத்தால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று கூறினார். இஸ்லாமியர்களின் கலாச்சாரப்படி பெண்கள் ஹிஜாப் அணிவது எங்கள் நிலைப்பாடு. அதில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறிய அவர், ஹிஜாப் அணிவது தேவைக்கோ, இஷ்டத்துக்கோ போடுவது கிடையாது அது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் என்று தெரிவித்தார். இந்த கலாச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்ற தமிழ்மகன் உசேன், அப்படி தலையிட்டால் அது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு தான் என்று குற்றம் சாட்டினார்.இந்நகழ்வில் நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன்,முன்னாள் அமைச்சர் ஜீவனாந்தம், மற்றும் இஸ்லாமியர்கள் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 11 Feb 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது