/* */

நாகை - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகை - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட எஸ்பி., ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி முதல் இந்த மாதம் 17ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

பேரணியில் காவலர்கள், மகளிர் காவலர்கள், பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கிய பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் ,வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Updated On: 4 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?