/* */

நாகை அருகே அக்கரப்பேட்டையில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகை அருகே  அக்கரப்பேட்டையில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
X

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 585 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் தலைமையில் ராட்சச இயந்திரம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் , அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

Updated On: 22 May 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!