Begin typing your search above and press return to search.
சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சூளகிரி அருகே ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி அருகே பாலேகவுண்டன் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றிய ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஏரியில் மூழ்கி இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், இது கொலையை? தற்கொலையா? என பல கோணங்களில் சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.