தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
கிருஷ்ணகிரியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில், கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் அஸ்லம் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், காவேரிப்பட்டணம் பேரூர் கழக செயலாளர் பாபு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான செங்குட்டுவன், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 150 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினர். மேலும், போலீசார், வருவாய்த்துறையினர் என 1200 பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் சந்திரா, சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், கடரசுமூர்த்தி, திருமலைசெல்வம், கராமத், வேலுமணி, ஜாமிர், ரியாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.