/* */

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 469 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1078 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரியை சேர்ந்த 60 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதே போல 64 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
அதே போல 48 வயது ஆண், கொரோனா பாதிப்புடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசசை பலன் அளிக்காமல் இறந்தார். மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 810 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 ஆயிரத்து 840 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், 6 ஆயிரத்து 783 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 28 May 2021 3:39 AM GMT

Related News