/* */

வறுமையின் காரணமாக 16 ஆண்டுகளாக லாரியை ஓட்டும் 54 வயது பெண்

குடும்ப வறுமையின் காரணமாக 16 ஆண்டுகளாக லாரியை ஓட்டும் 54 வயது பெண், தனது மகன்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

வறுமையின் காரணமாக 16 ஆண்டுகளாக லாரியை ஓட்டும் 54 வயது பெண்
X

சங்கிரிஅடுத்த பெரியபனங்காட்டை சேர்ந்தவர் கோபால். இவர் கடந்த 40 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருகிறார். இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வறுமையின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து செல்வமணியும் லாரியை ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வமணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.

ஆனாலும் லாரி ஓட்டுவதை நிறுத்தவில்லை. இவரது மூத்த மகன் அருள்முருகன். எம்பிஏ., முடித்துவிட்டு இவரும் வேலை கிடைக்காததால் லாரி ஓட்டி வருகிறார். இளைய மகன் மோகன்பிரபு. ஐடிஐ முடித்துவிட்டு டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து செல்வமணி கூறுகையில், வறுமையின் காரணமாக எனக்கு கேன்சர் நோய் இருந்தும், தங்களை போல் மகனும் லாரி ஓட்டி சிரமப்பட்டு வருவது வேதனையாக உள்ளது.

எனவே, தனது மகன்களுக்கு படித்த படிப்பிற்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது, மனித உரிமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சுதா உடனடிருந்தார்.

Updated On: 30 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...