/* */

எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்

எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்
X

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எருதுகளும் பங்கேற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்வையிட்டனர். இந்த எருது விழாவின்போது எருதுடன் கட்டப்பட்ட கயிறு காலில் சிக்கியது.

இதில் பெங்களூரு விஜய நகரத்தை சேர்ந்த பத்மநாபன்(41), என்பவர் காயம் அடைந்தார். அவரை பெங்களுரூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Feb 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...