Begin typing your search above and press return to search.
'எல்லாரும் ஓட்டு போடுங்க' தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி
மகளிர் தினத்தையொட்டி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் போடப்பட்டிருந்தது.
HIGHLIGHTS
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக பெண்கள் தினம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரையப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பலரும் பார்த்து ரசித்துச் சென்றனர்.
மார்ச 8 ம் தேதியான நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் உலக மகளிர் தினம் கொண்டாடினர். அன்றைய தினத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை கண்ணைக் கவரும் வகையில் வரைந்திருந்தனர்.
அனைவரும் கட்டாயம் ஓட்டு போடவேண்டும். அதற்கான உரிமையை இழந்துவிடக்கூடாது என்பன போன்ற கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்து சென்றனர்.