/* */

கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!

கரூரில் ஏழைகளின் வீடுதேடி சென்று இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கரூரில் வீடுதேடி இலவசஉணவு வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
X

கரூரில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை , எளிய மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உணவு தேவைப்படுவோர் 9498747614 , 9498747699 என்ற எண்களில் தொடர்பு கொண்டால் அவர்களின் வீடுகளுக்கே இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த திட்டத்தை மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு தொடங்கி வைத்தார்.

3,307 நபர்கள் உணவுத்தேவை என்று தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஊரடங்கு காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபர்கள் ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தால் 3 வேளை ஊரடங்கு காலம் முடியும் வரை உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On: 30 May 2021 9:36 AM GMT

Related News